legend updated

மின்சாரம் இல்லாமலேயே.. ‘பல்பை எரிய வைக்கும் அதிசய மனிதர்கள்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 27, 2019 09:47 PM

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடலில் பல்பை வைத்தால் மின்சாரம் இல்லாமலேயே எரிவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

Electricity from human body discovered in Telangana

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் சாந்த் பாஷா என்பவர் கடந்த வாரம் வீட்டிலிருந்த பல்பு செயலிழந்ததால் கடைக்குச் சென்று புதிய பல்பு ஒன்றை வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த அந்த பல்பை எடுத்து அவருடைய மகனும், மகளும் விளையாடியுள்ளனர்.

அப்போது மின்சாரம் இல்லாமலேயே அவர்களது கையிலிருந்த பல்பு எரிந்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ஷேக் பல்பை தன்னுடைய உடலிலும் வைத்து சோதனை செய்து பார்த்துள்ளார். அவரது உடலில் வைத்தவுடனும் மின்சாரம் இல்லாமல் பல்பு எரிந்துள்ளது.

இந்தத் தகவல் அப்பகுதியில் பரவியதை அடுத்து கிராம மக்கள் இவர்களை வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்பது இன்னும் சரியாகத் தெரியாத நிலையில், அனைவருடைய உடலிலும் மின்சாரம் இருக்கும் உடலில் ஈரப்பதம் இல்லாத நேரத்தில் அவை தெரியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #TELANGANA #ELECTRICITY #HUMANBODY #SHOCKING #VIRAL #VIDEO