darbar USA others

'படிக்காம' இப்டி ஊர் சுத்துறியே?... கல்லூரி மாணவரை 'கண்டித்த' பெற்றோர்... அடுத்து நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jan 13, 2020 12:16 PM

படிக்காமல் ஊர் சுத்துவதாக பெற்றோர் கண்டித்ததால், இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

College Student Suicide in Villianur, Police Investigate

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலன்(53). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அரிபாஸ்கர்(22). தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக அரிபாஸ்கர் கல்லூரிக்கு சரிவர செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றியதாக தெரிகிறது. மேலும் செல்போனிலும் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர். இதையடுத்து யாருடனும் பேசாமல் அரிபாஸ்கர் கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அரிபாஸ்கர் தன்னுடைய வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிறால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.