'பேருந்து கவிழ்ந்து கோர விபத்து'.. 'துடித்துப்போன பள்ளிக் குழந்தைகள்.. ஒரு நொடியில் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 18, 2019 09:41 AM

குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகளுக்கு நேர்ந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

children have been injured after a school bus overturned

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சிற்றுந்து மாதிரியான பள்ளிப்பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட வளைவு ஒன்றில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகத் தெரிகிறது.

மத்தியப் பிரதேசத்தின் ஹோஷங்காபாத் பகுதியில் பேருந்து திரும்பும்போது பேருந்து டிரைவர் இருக்கும் திசைக்கு எதிர்ப்புறமாக பக்கவாட்டில் கவிழுந்து சரிந்தது. இதில் 5 குழந்தைகளுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags : #ACCIDENT #BUS #SCHOOL #CHILDREN