'மகளின் தகாத புகைப்படங்களை அனுப்பி 30 நண்பர்களை வரவழைத்த தந்தை'.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 12, 2019 12:11 PM
தென்னிந்தியாவைச் சேர்ந்தவராகக் கூறப்படும் 12 வயது பெண் ஒருவரின் தாயை அவரது தந்தையின் நண்பர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக சிறுமி ஒருவர் கூறியுள்ளது அதிரவைத்துள்ளது.

தன் தந்தையின் நண்பர்கள் என தன் வீட்டுக்கு வரும் பலரும், தனது தந்தையுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, தனது தாயை ஒரு தனி அறையில் வைத்து பலாத்காரம் செய்ததாகவும், அதன் பிறகு தனது தந்தை தன்னையும் அந்த அறைக்குள் பிடித்து தள்ளிவிட்டதால், தன்னையும் அவர்கள் பலாத்காரம் செய்ததாகவும் அச்சிறுமி உளவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது நிர்வாண படங்களை புகைப்படம் எடுத்து, பலருக்கு அனுப்பி பேரம் பேசி அவர்களை விட்டுக்கு வரவழைத்து தன்னை பலாத்காரம் செய்ய அவர்களை தனது தந்தை அனுமதித்ததாகவும் அச்சிறுமி கூறியுள்ளார். சிறுமி பயிலும் பள்ளி ஆசிரியை ஒருவரின் ஆலோசனையின் பேரில் சிறுமியிடம் பேசிய உளவியலாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரால் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவரான கண்டறியப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த போலீஸாரிடம் தன்னை பலாத்காரம் செய்த 30 பேர்களுள் 25 பேரை சிறுமி அடையாளம் காட்டியுள்ளார். இடையிடையே தன்னை தனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
