'திருமணம் செய்துவைக்காத விரக்தியில்'.. 'பெற்றோருக்கு' மகன் கொடுத்த கொடூர 'தண்டனை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 23, 2020 12:55 PM

திருமணம் செய்து வைக்காததால் பெற்றோரை அம்மிக்கல் போட்டு கொலை செய்ததாக, போலீஸார் மகனை கைது செய்தனர்.

unmarried man arrested for killing parents in frustration

ஜி.குப்பந்தாங்கலைச் சேர்ந்த கோவிந்தசாமி, மாங்கனி தம்பதியின் மகன் ராஜ்குமர், கடந்த சில மாதங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லி பெற்றோரை வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் திருமணம் ஆகாத விரக்தியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஆத்திரத்தில் ராஜ்குமார் தனது பெற்றோரின் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்றுள்ளார். இதனை அடுத்து தேனி மலைப்பகுதியில் பதுங்கியிருந்த ராஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

Tags : #PARENTS