கிணத்துக்குள்ள... '3' சாக்கு மூட்டைகளில் கிடந்த 'உடல்கள்',,. அதுல '2' பேரு 'திருநங்கை'ங்க... 'பகீர்' கிளப்பும் 'ஃபிளாஷ்பேக்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Aug 23, 2020 01:59 PM

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி என்னும் பகுதியை சேர்ந்த ரேணுகா என்ற திருநங்கையும், ரிஷிகேஷ் என்பவரும் தம்பதி போல் வாழ்ந்து வந்தனர். இவர்களது எதிர் வீட்டில் திருநங்கை பவானி மற்றும் பெயின்டர் முருகன் ஆகியோரும் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், பவானி - முருகன் ஆகியோரையும், அதே பகுதியை சேர்ந்த அனுஷ்கா என்ற திருநங்கை உட்பட 3 பேரை பல நாட்களாக காணவில்லை.

tirunelveli 2 transgenders and 1 man murdered three got arrested

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள திருநங்கைகள் சிலர் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு சென்று 3 பேர் காணாமல் போனது தொடர்பாக புகாரளித்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில், ரிஷிகேஷ் உட்பட ரிஷிகேஷின் நண்பர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது மூன்று பேர் காணாமல் போனது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரிஷிகேஷ், பாலை மகாராஜநகர் என்னும் பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது, ரேணுகாவுக்கு தெரியாமல் ரிஷிகேஷ் அனுஷ்கா என்ற திருநங்கையுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி அனுஷ்கா அவ்வப்போது ரிஷிகேஷிடம் இருந்து, பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரிஷிகேஷ் பணம் தர மறுக்கவே, தாங்கள் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை ரேணுகாவிடம் காண்பித்து விடுவதாக அனுஷ்கா, ரிஷிகேஷை மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாத இறுதியில், அனுஷ்காவை தனியாக அழைத்து வந்து அவருக்கு ரிஷிகேஷ் மது ஊற்றிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து ரிஷிகேஷ், தனது நண்பர்களான ஸ்னோவின், செல்லதுரை ஆகியோருடன் சேர்ந்து அனுஷ்காவை கழுத்தை இறுக்கி கொலை செய்து சாக்கு மூட்டையில் கிணற்றில் வீசியுள்ளனர்.

இதற்கிடையே, முருகன் - பவானி ஆகியோருக்கு குழந்தை தத்தெடுத்து தருவதாக கூறி 3 லட்சம் ரூபாயை ரிஷிகேஷ் வாங்கியுள்ளார். தொடர்ந்து குழந்தையும் தத்தெடுத்து கொடுக்காமல் முருகனை ரிஷிகேஷ் ஏமாற்றி வந்த நிலையில், அந்த பணத்தினை மீண்டும் முருகன் கேட்டுள்ளார். இதனால், குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, முருகனை ஒரு இடத்திற்கு வரச் சொல்லி அங்கு வைத்து நண்பர்களுடன் ரிஷிகேஷ் கழுத்தை இறுக்கி முருகனை கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளார். அடுத்த 10 நாட்கள் கழித்து, பவானியையும் கொலை செய்து முருகனை வீசிய அதே கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டி வீசியுள்ளனர்.

தொடர்ந்து, மூன்று பேரின் உடல்களையும் போலீசார் கிணற்றில் இருந்து கைப்பற்றினர். ரிஷிகேஷ், ஸ்னோவின், செல்லதுரை ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tirunelveli 2 transgenders and 1 man murdered three got arrested | Tamil Nadu News.