'மதுபோதையில் புதுமாப்பிள்ளை செய்த கொடூரம்'... 'மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்'... 'பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 21, 2020 03:39 PM

புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry Newly Wed Son Kills Mother Over Money Issue

புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்ற ராணி அங்கிருந்து தான் சம்பாதித்த பணத்தை மகன் அய்யனாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைவைத்து அவரும் புதிதாக வீடு கட்டி, தொழில் தொடங்கியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு புதுச்சேரி திரும்பிய ராணி தன்னிடம் இருந்த மீதிப் பணத்தை தனது மகளுக்கு கொடுக்க விரும்பியதாகவும், அதற்கு அய்யனார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அய்யனாரும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, புதிதாக கட்டிய வீட்டில் தாய், மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அய்யனாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், கடந்த 11ஆம் தேதி மதுபோதையில் இருந்த அய்யனாருக்கும், ராணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் ராணி இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராணியின் கழுத்து நெரிக்கப்பட்டதும், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதைவைத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியதில் மகன் அய்யனாரே ராணியை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவர, அய்யனாரை அவர்கள் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Puducherry Newly Wed Son Kills Mother Over Money Issue | India News.