‘தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு....’ விடுமுறை குறித்த தகவலை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 10, 2020 08:10 PM

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சார்ந்த  பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

tamilnadu ED announced the summer holidays for school

மாநிலம் முழுவதும் கடந்த 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை சுமார் 8.35 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். அதேபோல 11-ம் வகுப்புத் தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடைகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி முடிகின்றன. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ஏப்ரல் மாதம் தொடங்கி  ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் 2019-2020 ஆம் கல்வியாண்டின் பள்ளி வேலை நாள் ஏப்ரல் 20 ஆம் தேதியோடு முடிவடைவதால், தமிழக அரசின் கீழ் இயங்கும் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்  பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதனால் ஏப்.20-ம் தேதிக்கு மறுநாள், ஏப்ரல் 21-ல் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.

2020- 2021 ஆம் கல்வியாண்டின் பள்ளி திறக்கும் நாள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில்,  ஜூன் முதல் வாரம் தொடங்கும் எனவும் பள்ளி கல்வித்துறை  இருப்போர் கூறிவருகின்றனர்

Tags : #SCHOOL