'பருத்திப் பூக்களை' பதம் பார்த்த 'வெட்டுக்கிளிகள்...' 'நாசமடைந்த 70 ஏக்கர் பயிர்...' 'அச்சத்தில்' தமிழக 'விவசாயிகள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jun 11, 2020 10:49 AM

பருத்தி பூக்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து தின்றதால் தமிழக விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

Tamil Nadu farmers fear locusts invading cotton blossoms

பாகிஸ்தான் எல்லையையொட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வழக்கமாக இருக்கும் நிலையில், தற்போது அம்மாநிலத்தின் ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களின் குடியிருப்பு பகுதிகள், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள் வரை தற்போது படையெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்தி கையாள்வதற்கான வழிமுறைகளையும் வேளாண் துறை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தமிழகத்தில் ஆங்காங்கே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு காணப்படுவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி அருகே பாலூரில் பருத்தி பூக்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து தின்றுள்ளது.

சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி பூக்களை வெட்டுக்கிளிகள் பதம் பார்த்துள்ளன. இதனால் சாகுபடி பாதிக்கப்படும் என விவசாயகிள் அச்சமடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu farmers fear locusts invading cotton blossoms | Tamil Nadu News.