legend updated recent

‘நடந்து சென்றபோது நேர்ந்த பயங்கரம்’... ‘தங்கையின் கணவருக்கு’... ‘மைத்துனர்களால் நடந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 16, 2019 11:24 AM

சென்னையில் தங்கையின் கணவரை, சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sister\'s husband murdered by brother in laws in chennai

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த வியாழக்கிழமையன்று இரவு, வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அவரது மைத்துனர்கள் விஜயதாஸ் மற்றும் மோகன்தாஸ் ஆகிய இருவரும் ஜெயக்குமாரை வழிமறித்து மடக்கினர். அவர் என்னவென்று சுதாரிப்பதற்குள், அவர்கள் இருவரும் ஜெயக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தார்.

பின்னர் மீட்டகப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார்  உயிரிழந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தங்கையின் கணவரை, வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #MURDER #VYSARPADI