BGM Shortfilms 2019

'திருட்டு பைக்கில் வந்த 'காதல் ஜோடி'யின் பகீர் செயல்'... அதிர்ந்த பெண்... சென்னையில் பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 14, 2019 04:51 PM

திருட்டு பைக்கில் சென்று செல்போன் பறித்த காதல் ஜோடியின் செயல் பலரையும் அதிர செய்துள்ளது. இந்த ஜோடி தற்போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது.

Young Couple Arrested for Stealing mobile in Chennai

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த லிப்சா என்பவர், கடந்த 12 ஆம் தேதி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த இருவர், லிப்சாவின் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் லிப்சா புகார் அளித்தார். இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், செல்போனை பறிக்க பயன்படுத்தப்பட்ட பைக்கின் நம்பரை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் சைதாப்பேட்டை லாட்ஜ் பகுதியில் அவர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாட்ஜில் தங்கியிருந்த ராஜு, சுவேதா ஆகிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

இதில் ராஜூ மீது ஏற்கனவே வடபழனி காவல்நிலையத்தில் செல்போன் பறிப்பு, வாகனத் திருட்டு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. காதலி சுவாதி கரூரை சேர்ந்தவர் என்பதும் அவர் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. காதல் ஜோடி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHAINSNATCHING #STEALING #MOBILE #COUPLE #CHENNAI