அடுத்த 24 மணிநேரத்தில்... விடைபெறும் வடகிழக்கு பருவமழை... பனிப்பொழிவு நிலவும்... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 09, 2020 11:12 PM

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலக உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

North East Monsoon rain to be end in next 24 hours, Snow

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபா் 16-ம் தேதி தொடங்கியது. முதல் பாதியில் மழை பொழிவு நன்றாக இருந்தாலும், நவம்பா் மாதத்தில் சற்று மழை குறைந்தது. டிசம்பா் மாதத்தில் பரவலாக நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபா் 1-ம் தேதி முதல் டிசம்பா் 31-ம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு 440 மி.மீ. ஆனால், இந்தப் பருவ காலத்தில் 450 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 2% அதிகம் என வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பருடன் முடிவடைந்தாலும், மேற்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் ஜனவரியிலும் மிதமான மழை பெய்து வந்தது. இதற்கிடையில், கடந்த 2 நாள்களாக மழை அளவு குறைந்துள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை​யும், காலையில் பனிப்பொழிவும் நிலவும். வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் முழுமையாக விடைபெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : #RAIN #TAMILNADU #SNOW