முதல் நாளே வெளுத்து வாங்கும் மழை... அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 01, 2020 10:50 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிவடைய இருந்த நிலையில், தற்போது அது நீடித்து வருவிதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

North East Monsoon Rain Continue In Tamilnadu Till Jan 5th

வடகிழக்கு பருவமழையால், தமிழகத்தில் புத்தாண்டு அன்றே பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் இருப்பதால் மழை பெய்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருநில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜனவரி 5-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : #RAIN #IMD #TAMILNADU