"சசிகலா வெளியாகும் நேரம் வந்துவிட்டதா? வெளியான தேதி?" .. 'சமூக' வலைதளங்களில் பரவும் 'பரபரப்பு' தகவல் உண்மைதானா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 26, 2020 10:20 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகர் உள்ளிட்ட 3 பேருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

FactCheck: sasikala releases from bangalore jail, here is the truth

இதனை அடுத்து பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறையில் இவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலா விடுதலையாவதாக ஒருதகவல் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

முன்னதாக பாஜக பிரமுகரான ஆசீர்வாதம் ஆச்சர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், சசிகலா ஆகஸ்டு 14-ஆம் தேதி பெங்களூரு அக்ஹராக சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக ட்வீட் செய்திருந்தார். இதனை அடுத்து பல ஊடகங்களும் சமூக ஊடகங்களும், சசிகலா ஆகஸ்டு 14-ஆம் தேதி வெளியாகிறார் என்றே தகவல்களை வெளியிட்டிருந்தன.

ஆனால் சிறைச்சாலையின் நெருங்கிய காவல்துறை வட்டாரங்களின் தரப்பில் இருந்து, இந்த தகவல் முற்றாக மறுக்கப்பட்டுள்ளதோடு, இந்த தகவல் ஒரு வதந்தி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. FactCheck: sasikala releases from bangalore jail, here is the truth | Tamil Nadu News.