விமான பயணம் செய்து இளம்பெண்ணை தேடி வந்த வாலிபர்.. நேரில் பார்த்ததும் செய்த காரியம்!! பதைபதைக்க வைத்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 28, 2022 05:54 PM

சத்தீஸ்கர் மாவட்டம், கோர்பா மாவட்டத்தில் உள்ள ஜாஷ்பூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு நீலிஸ் என்ற மகனும், நீல்குஷம் என்ற மகளும் உள்ளனர்.

Youth slayed woman after she refuse to speak in phone

Also Read | 12 வருஷம் முன்னாடி மாயமான மகன்.. இறந்து போயிருப்பான்னு நெனச்ச தாய்க்கு.. இத்தனை நாள் கழிச்சு வந்த போன் கால்!!

நீல்குஷம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தனியார் பேருந்தில் அடிக்கடி பயணம் செய்து வந்த போது பஸ் கண்டக்டரான ஷதாப் கான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார் ஷதாப் கான். அங்கிருந்தும் அடிக்கடி நீல்குஷமிடம் பேசி வந்துள்ளார் ஷதாப்.

அப்படி ஒரு சூழலில், திடீரென ஷதாப் கானுடன் பேசுவதை நீல்குஷம் விரும்பாமல் அதனை தவிர்த்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல், செல் போன் அழைப்புகளை எடுக்காமலும், வாட்ஸ் அப்பில் ஷதாப் கானை நீல்குஷம் பிளாக்கும் செய்ததாக சொல்லப்படுகிறது.

காதலி தன்னிடம் பேசுவதை திடீரென நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த ஷதாப் கான், தொடர்ந்து போனில் அழைத்தும் தொந்தரவு செய்ததாக தகவல்கள் கூறுகின்றது. தன்னிடம் பேசும் படி மிரட்டியதுடன் நீல்குஷம் குடும்பத்தினரையும் அழைத்து மிரட்டி உள்ளார் ஷதாப்.

இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சத்தீஸ்கரின் ராய்ப்பூருக்கு ஷதாப் கான் வந்துள்ளதாக தெரிகிறது. அங்கிருந்து சொந்த ஊரான பிலாஸ்பூருக்கு வந்த ஷதாப் கான், பின்னர் சனிக்கிழமை நீல்குஷம் வீட்டிற்கும் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது வீட்டில் நீல்குஷம் மட்டும் தனியாக இருக்க, அவரிடம் தன்னை காதலிக்கும் படியும் தொடர்ந்து தன்னிடம் பேசும் படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் இருவருக்கும் இடையே முற்றவே தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து நீல்குஷமின் உடல் பகுதிகளில் சரமாரியாக தாக்கி அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஷதாப் கான் தப்பி ஓடியதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

51 முறை நீல்குஷம் உடலில் குத்தியுள்ள ஷதாப் கான், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மாலையில் வீடு திரும்பிய நீல்குஷம் சகோதரர், சகோதரி நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடம் வந்து அவர்கள் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். நீல்குஷம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், ஷதாப் கானையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Also Read | "அவர் ஆடுற விதத்துக்கு.. சீக்கிரமே ஒரு நாள் கிரிக்கெட்ல 300 ரன் அடிப்பாரு".. இந்திய வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்.. யாரை சொல்றாரு?

Tags : #YOUTH #WOMAN #REFUSE #SPEAK #PHONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth slayed woman after she refuse to speak in phone | India News.