VIDEO: ‘வீல்சேர்’தான் வாழ்க்கை.. ‘இது செட் ஆகாது’ கடைசிவரை உறுதியாக இருந்த இளம்பெண்.. மெய்சிலிர்க்கவைத்த காதல் கல்யாணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 04, 2020 12:02 PM

திருச்சூர் அருகே விபத்தில் சிக்கி சக்கர நாற்காலியில் வாழ்க்கை நடத்தி வரும் இளைஞரை பேஸ்புக் மூலம் காதலித்து இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Pranav and Shahna love marriage in Thrissur video goes viral

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள இருஞ்ஞால குடா பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (25). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு விபத்தில் ஒன்றில் சிக்கி அவரது உடல் செயலிழந்தது. இதனால் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். மனம் தளராத பிரணவ் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் சக்கர நாற்காலியில் பொது இடங்களுக்கு சென்று தன்னால் முயன்ற சேவைகளை செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவான இவர் ஊனம் எதற்கும் தடையில்லை என பதிவிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் பிரணவின் வீடியோக்களை பார்த்து சஹானா என்ற பெண் ஈர்ப்புக் கொண்டுள்ளார். பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பிரணவிடம் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாற பிரணவிடம் இதை சஹானா தெரிவித்துள்ளார். ஆனால் தனது உடல்நிலையை கூறி பிரணவ் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதற்கு சஹானாவின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த சஹானா ஒருநாள் பிரணவை தேடி அவரது வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கு அவரது பெற்றோரிடம் பிரணவை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால் பிரணவின் பெற்றோர் இதை ஏற்கவில்லை.

ஆனால் சஹானா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே சஹானாவுக்கு பிரணவ் தாலி கட்டினார். இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ‘காதல் என்பது இரு உடல்களுக்கிடையில் இல்லை, இரு மனங்களினுடையது’ என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : #KERALA #FACEBOOK #LOVE #MARRIAGE #VIRAL