legend updated recent

‘பதறவைக்கும் வீடியோ’... ‘யார் பேச்சையும் கேட்காமல்’... ‘ரிஸ்க் எடுக்க முயன்ற நபர்’... 'கடைசியில் நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 16, 2019 12:26 PM

பொதுமக்கள் எச்சரிக்கையை மீறி ஆற்றை கடக்க முயன்ற நபர், வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி, பார்ப்பவரை பதறவைத்துள்ளது.

Man washed away while crossing a flooded river in Rajgarh

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வடமாநிலங்களையும் வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில், கனமழையால் அங்கு ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கார்க்கில் உள்ள ஆற்றில், கனமழையான கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, அங்குள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ராஜ்கார்க்கில் ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை கடந்து ஒரு கரையில் இருந்து, மற்றொரு கரைக்கு ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று செல்ல முயன்றார். அவரை செல்ல வேண்டாம் என சுற்றியிருந்தவர்கள் எச்சரித்தும், அவர் கேட்காமல் தொடர்ந்து வெள்ளத்தில் நடந்து சென்றார். அப்போது அவர் வெள்ள நீரோட்டத்தின் வேகத்தை சமாளிக்க முடியாமல்,  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடலை போலீசார் இன்று மீட்டனர். இதனிடையே, அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.

Tags : #RAGARH #MADYAPRADESH #RIVER #VIRALVIDEO