‘உடம்பில் 20 கத்திக்குத்து’.. ‘குப்பைத்தொட்டியில் இருந்து கவ்விச் சென்ற நாய்’.. பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 28, 2020 04:40 PM

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் இருந்து நாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 day old baby found with 20 stab wounds in Gujarat

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள மஹித் என்ற கிராமத்தில் உள்ள ஒரு திறந்தவெளியில் கடந்த புதன்கிழமை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே அருகில் உள்ள குப்பைத்தொட்டியை நோக்கி சிறுவர்கள் ஓடியுள்ளனர். அப்போது நாய் ஒன்று குப்பைத்தொட்டியில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை கவ்விக்கொண்டு செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை அடுத்து உடனே அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்து, நாயிடமிருந்து குழந்தை மீட்டுள்ளனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கூறுகையில், ‘குழந்தையின் உடம்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. குழந்தை பிறந்து 3 நாட்கள்தான் ஆகியிருக்கும் என தெரிகிறது. மேலும் குழந்தை கொண்டு வரப்பட்டபோது வாயில் மண் இருந்தது, மூச்சும் விடவில்லை. சிகிச்சைக்குப்பின் குழந்தை சற்று சீராக உள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடம்பில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததால் யாரோ கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும் குழந்தையின் பெற்றோர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி, அதை நாய் கவ்விச் சென்ற கொடூரம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #GUJARAT #RAJKOT #BABY