‘பயங்கர கார் விபத்தில்’.. ‘மேல் படிப்புக்காக கனடா சென்ற’.. ‘இளைஞர்களுக்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 08, 2019 02:28 PM

கனடாவில் ஏற்பட்ட கார் விபத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Three Students From Punjab Die In Car Crash In Canada

கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள ஆயில் ஹெரிட்டேஜ் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் காரின் ஓட்டுநர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் பயணித்த 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர் ஆகிய 3 இளைஞர்களும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 20 வயதுமதிக்கத்தக்க இவர்களில் தன்வீர் சிங் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக கனடா சென்றுள்ளார். மற்ற 2 பேரும் ஏப்ரல் மாதம் அங்கு சென்றுள்ளனர்.

Tags : #CANADA #CAR #CRASH #ACCIDENT #STUDENTS #YOUNGSTERS #PUNJAB