darbar USA others

பர்த் டே விஷ் பண்ண வந்த பாட்டியம்மா... கலைந்து கிடந்த பொருட்கள்... 3 வயது குழந்தைக்கு... அம்மாவால் நிகழ்ந்த கொடூரம்... உறைந்து போக வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jan 14, 2020 08:19 PM

மின்சாரம் மற்றும் தண்ணீரின்றி 3 வயது குழந்தையை தனியாக வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, ஒருவாரம் காலம் பார்ட்டிக்கு சென்ற அம்மாவால் கொடூர மரணம் நிகழ்ந்துள்ளது.

mother confesses to murdering her child after left alone

மேற்கு ரஷ்யாவில் உள்ள கிரோவ் நகரைச் சேர்ந்தவர் 21 வயதான மரியா ப்லென்கினா (Maria Plenkina). இவர் தனது 3 வயது குழந்தை கிறிஸ்டினாவுடன் தனியாக ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அதிக மது போதைப் பழக்கம் உடைய இவர், எப்போதும் தன் நண்பர்களுடன் இணைந்து வெளியில் செல்வது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பார்ட்டிக்கு வெளியில் சென்ற மரியா, ஒரு வாரமாகியும் வரை வீடு திரும்பவில்லை. அப்போது அவர், வீட்டில் குழந்தையைத் தனியாக வைத்துப் பூட்டி, வீட்டில் யாரும் இல்லாததுபோல அனைத்தையும் செட் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

மரியா வெளியில் சென்றிருந்த அதே வாரத்தில் குழந்தை கிறிஸ்டினாவுக்குப் பிறந்தநாள் வந்துள்ளது. குழந்தைக்கு வாழ்த்து சொல்வதற்காகப் பரிசுடன் வீட்டுக்கு வந்துள்ளார் மரியாவின் தாயும், கிறிஸ்டினாவின் பாட்டியுமான இரினா. அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு பயந்த அவர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். குப்பைக் கிடங்குபோல இருந்த வீட்டில் ஒரு குளிர் அறையில் குழந்தை கிறிஸ்டினா உடம்பில் துணி இல்லாமல் இறந்த நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது கொலையாக இருக்கலாம் என நினைத்த இரினா, கிறிஸ்டினா இறந்தது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கிடைத்த முடிவு, பாட்டி உட்பட காவல் துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், குழந்தை கிறிஸ்டினா துணி துவைக்கும் சோப்பு பவுடரை உண்டதால் இறந்துள்ளார் என அறிக்கை வெளியானது. பின்னர் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

அதில் `குழந்தையின் தாய் மரியா, கிறிஸ்டினாவை வீட்டில் தனியாக வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். வீட்டில் குழந்தை இருப்பது தெரியக் கூடாது என்பதற்காக வெளியில் செல்லும் முன்பு, வீட்டின் தண்ணீர் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, மின் விளக்குகளையும் அணைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதேநேரம் வீட்டிலிருந்த குழந்தைக்கு உணவுகூட வைக்காமல் தனியாக விட்டுள்ளார். கிறிஸ்டினா தன் தாய் வெளியில் செல்லும்போது எந்தவித பதற்றமும் பயமும் இன்றி இருந்துள்ளார். அழவில்லை, எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. ஆனால், உணவு இல்லாமல் பசியால் தவித்துள்ளார். அதனால் வீட்டில் மீதமிருந்த தயிர், சிக்கன் போன்றவற்றை உண்டுள்ளார்.

அதிக பசியினால் குழந்தை துணி துவைக்கும் பவுடரை உணவு என நினைத்துச் சாப்பிட்டுள்ளது. அதிக பவுடரை சாப்பிட்டதால் அது குழந்தையின் உடலைப் பாதித்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் குழந்தை துடிதுடித்து இறந்தது தெரியவந்துள்ளது’. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், மரியா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். `உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தையைத் தனியாக விட்டுச் சென்றது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கிறிஸ்டினாவைக் கொல்லும் நோக்கில் எதுவும் செய்யவில்லை. குழந்தை உயிரிழக்கும் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையை வீட்டில் தனியாக விட்டு கொடூரமாகக் கொலை செய்த குற்றத்துக்காக மரியாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. தன் பேத்தி இறப்புக்கு வேதனை தெரிவித்துள்ள மரியாவின் தாய் இரினா, `மரியா வெளியில் செல்வது தனக்குத் தெரியாது, ஒருவேளை தெரிந்திருந்தால் குழந்தையை என்னுடன் அழைத்துச் சென்றிருப்பேன். மரியா இப்படிச் செய்வாள் என நினைக்கவில்லை. அனைத்தும் நலமாக உள்ளதாக என்னிடம் பொய் கூறினாள். அனைவரிடமும் அதே பொய்யைக் கூறியுள்ளார்’ என்று கண்ணீருடன் தனது பேத்தியை கூறினார்.

Tags : #MOTHER #GIRL #CHILD