‘2 தலை, 5 உடல்கள்’!.. ‘உடைந்த நிலையில் கரை ஒதுங்கிய பேய்படகு’.. திகில் கிளப்பும் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Dec 29, 2019 09:37 PM

ஜப்பான் தீவில் மனித சடலங்களுடன் மர்ம படகு கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ghost boat carrying human dead bodies in Japan island

ஜப்பானில் உள்ள சாடோ தீவு அருகே பாதி உடைந்த நிலையில் மரப்படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உடைந்த படகை சோதனையிட்டுள்ளனர். அப்போது படகில் சிதைந்த நிலையில் 5 சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதில் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு தலைகள் இருந்துள்ளன.

இதனை அடுத்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், படகில் கொரிய மொழியில் எண்களும், பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கொரிய நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதே மாதத்தில் இந்த தீவில் கரை ஒதுங்கும் இரண்டாவது படகு இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடிக்கடி இதுபோன்ற மர்ம படகுகள் கரை ஒதுங்குவதால் இதனை ‘பேய்படகு’ என ஜப்பான் மக்கள் அழைத்து வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 44 படகுகள் சடலங்களுடன் கரை ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : #JAPAN #GHOSTBOAT #DEADBODIES