'ஆத்தா, மாரியாத்தா' புயல் வேகத்துல வருதே'...'ஒத்தையில சிக்கிய இளைஞர்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரண்டு மாடுகளுக்கு இடையில் சிக்கி பரிதவித்த இளைஞரின் வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டி போட்டிகள் நடைபெற்றன. இதில் நடந்த பல சுவாரசிய நிகழ்வுகள் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டு மாடுகளுடன் மாட்டிக்கொண்ட இளைஞர் ஒருவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. சாலையின் ஓரத்தில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது காளை மாடு அவரை மிரட்ட பயத்தில் ஓடி தரையில் படுத்து கொள்கிறார். ஆனாலும் அந்த இளைஞரை மாடு உதைக்கிறது.
இருப்பினும் அந்த இளைஞர் எந்தவித காயமும் இல்லாமல் தப்பித்து ஓடுகிறார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த மாடு அந்த இளைஞரை ஒரு வழி பண்ணிவிட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags : #JALLIKATTU #TRAPPED #BULLA #VIDEO
