VIDEO 'பேர்கூட' கேக்காம அர்ச்சனை பண்ணிட்டீங்க?.. கேள்விகேட்ட பெண்ணை.. அறைந்த தீட்சிதர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 17, 2019 05:50 PM

மகனின் பெயர்கூட கேட்காமல் அர்ச்சனை பண்ணி விட்டீர்களே? என கேள்விகேட்ட பெண்ணை தீட்சிதர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Women Attacked by Chidambaram Kovil Priest, Video goes viral

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி மனைவி லதா(51). இவர் காட்டுமன்னார்கோயில் அடுத்த ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று தன்னுடைய மகனின் பிறந்தநாள் என்பதால் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குருணி விநாயகர் கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்துள்ளார்.

அந்த நேரம் கோயில் பணியில் இருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனை செய்ய தேங்காய், பழம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். ஆனால் மகனின் பெயரை சொல்வதற்குள் தர்ஷன் உள்ளே சென்று அர்ச்சனை செய்து தேங்காயை உடைத்து வெளியில் கொண்டுவந்து தந்திருக்கிறார். அவரிடம் லதா ராசி, நட்சத்திரம், பெயர் என எதையும் கேட்காமல் எப்படி அர்ச்சனை செய்தீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு தீட்சிதர் ஏன் நீ வந்து உள்ளே செய்யேன் எனக் கூறியுள்ளார்.

 

இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் லதாவை கீழே தள்ளிவிட்டு தீட்சிதர் அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் லதா மயங்கி கீழே விழ, அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து தட்டிக் கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து லதா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளார். தப்பியோடிய தீட்சிதர் மீது சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர்.

Tags : #VIDEO