"எதுக்கு ஒரு வாரமா வீட்டு வாசல் முன்னால நடமாடுற?".. 'ஊரடங்கால்' கள்ளக்காதலருக்கு 'காஞ்சிபுரத்தில்' நடுங்கவைத்த 'சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 27, 2020 09:44 PM

தனது முன்னாள் காதலியை கைவிட மனமில்லாததால், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்த காதல், ஊரடங்கால் தெரியவர, கள்ளக்காதலியின் கணவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

womans brother and husband killed her affair in Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பருத்திகொள்ளை க்கிராமத்தைச் சேர்ந்த 30  வயது ஜெயகுமாருக்க்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் திவ்யாவுக்கு திருமணத்துக்கு முன்பே உத்திரமேரூர் பேரூராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்த சுந்தரமூர்த்திக்கும் காதல் இருந்துள்ளது. ஆனால் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த திவ்யாவின் தாய் தனது அண்ணன் மகனுக்கு , திவ்யாவை திருமணம் செய்துவைக்க, இதற்கிடையே சுந்தரமூர்த்திக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனது. எனினும் சுந்தரமூர்த்திக்கும் திவ்யாவுக்குமான காதல் தொடர்ந்துள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியூர் சென்று சுற்றுவது, அடிக்கடி ஊருக்கு ஒதுக்குப்புறமாக சந்திப்பதுமாய் இருந்து வந்துள்ளனர்.

ஆனால் ஊரடங்கால் திவ்யாவை சந்திக்க முடியாமல் இருந்துள்ளார் சுந்தரமூர்த்தி. இதனால் திவ்யாவின் வீட்டு வாசல் வழியே நேரடியாக சுந்தரமூர்த்தி நடமாடுவதும், அந்த நேரம் பார்த்து திவ்யா சரியாக வீட்டு வாசல் முன் வருவதும் கடந்த ஒரு வாரமாக நடந்துள்ளது. இந்த விவகாரம் திவ்யாவின் கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, கடந்த வெள்ளி அன்று, திவ்யாவின் அண்ணன் தினேஷும், திவ்யாவின் கணவரும் திவ்யாவின் கணவரது வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த சுந்தரமூர்த்தியை கையும் களவுமாக பிடித்த திவ்யாவின் கணவர் ஜெயகுமாரும், திவ்யாவின் அண்ணன் தினேஷூம், சுந்தரமூர்த்தியிடம், “ஏன் ஏன் இங்கு அடிக்கடி சுற்றித் திரிகிறாய்?” என கேட்க, மூவருக்கும் வாக்குவாதம் உண்டாகியது. இதனால் ஆத்திரப்பட்ட திவ்யாவின் கணவரும் அண்ணனும் சுந்தரமூர்த்தியை அருகில் இருந்த கட்டையால் தாக்கினர்.

அதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் சுந்தரமூர்த்தியை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தரமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், திவ்யாவின் அண்ணனையும் கணவரையும் கைது செய்தனர்.

Tags : #AFFAIR