சூப்பர் மேன் சார் நீங்க... கிராசிங்கில் சிக்கிய முதியவர்... ஓடும் ரயிலை நிறுத்திய ஓட்டுனர் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Alagulakshmi T | Feb 02, 2022 09:42 PM

ரயில்வே கிராசிங்கில் பயணிகள் சிக்குவதும் மற்றும் ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் இறங்க முயற்சிப்பதும், பல நேரங்களில் தண்டவாளங்களில் சிக்கும் பல செய்திகள் வெளியாகியுள்ள ரயில்வே ஊழியர்கள் ரயில்வே காவல்துறையினர் பத்திரமாக மீட்கும் பல காட்சிகள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் சிதம்பரம் அருகே ரயில்வே கிராசிங்கில் ரயில் பக்கவாட்டில் சிக்கிய முதியவரை ரயிலை நிறுத்தி ரயில்வே ஓட்டுனர் அவரை பத்திரமாக மீட்டார். இருப்பினும் படுகாயம் அடைந்த வரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரயில்வே ஓட்டுநரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

The train driver who stopped the train and saved the old man

”புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” பாட்டுக்கு ஏத்தமாறி செம்ம கிளைமெட் - வேற எங்க இங்கதான்!!...

கிராசிங்கில் சிக்கிய முதியவர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மன்னார்குடி to திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணி அளவில் சிதம்பரம் அருகே உள்ள கந்தமங்கலம் என்னும் கிராமத்தில் கிராசிங் செய்யும் போது அதே பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணு என்பவர் ரயில் பக்கவாட்டில் விழுந்துள்ளார். அவருக்கு காது கேட்காது என்பதும் குறிப்பிடத்தக்கது இதனை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்த ,

அடிபட்ட துரைக்கண்ணு வை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியோடு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் 8 மணிக்கு செல்ல வேண்டிய ரயில் ஒன்று 1.15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

ரயிலை நிறுத்தி உதவிய ஓட்டுனர்

இதில் அடிபட்டதும் ரயிலை நிறுத்தி அவருக்கு முதல் உதவி செய்து ஓட்டுநருக்கு ரயில் பயணம் செய்த பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அப்பகுதி பொது மக்களும் அவர்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலில் பக்கவாட்டில் சிக்கிய முதியவர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் தொடர்ந்து ரயில்வே ஊழியர்களும் ரயில்வே காவல்துறையினர் மற்றும் தற்போது ரயில்வே ஓட்டுனர் எனப் பலரும் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும்

உதராணமாக,பல இடங்களில் ரயில் நிற்பதற்குள் இறங்குவதும், ஏறுவதும் மேலும், ரயிலில் பள்ளி மாணவர்கள் சாகசம் முதலியவை செய்கின்றனர். அவ்வாறு, பயணம் செய்யும் பயணிகளை மீட்கும் பணியில் தங்கள் உயிரை பணையம் வைக்கின்றனர். அதற்கு இந்த மனிதாபிமான செயலும் முக்கிய பங்கு பெறும். ஓடும் ரயிலை நிறுத்தி உதவிய ரயில் ஓட்டுனரும் சூப்பர் மேன் தான் எனப் பலரும் பார்கின்றனர்.

நீண்ட நேரமாக எடுக்காத பேருந்து - தட்டிக்கேட்ட பெண்ணைத் தள்ளிவிட்ட டிரைவர் - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் !!

Tags : #TRAIN DRIVER #ELDERLY MAN #CROSS #RESCUE #RAIL #OLDMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The train driver who stopped the train and saved the old man | Tamil Nadu News.