‘படிக்க வெச்ச இன்ஜினியரிங் வீண் போகல!’... கடலில் மூழ்கியவர்களின் உயிரைக் காத்த ட்ரோன்.. கெத்து காட்டிய கல்லூரி மாணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sivasankar K | Jan 07, 2021 05:59 PM

அரேபிய கடல் நீரில் மூழ்கிய நான்கு மீனவர்களை ட்ரோன் உதவியுடன் காப்பாற்றிய 19 வயதான பொறியியல் மாணவர் ஒருவர் கேரளாவில் ஒரு ஹீரோ ஆகியுள்ளார்.

Kerala BTech Student drone helps spot and rescued fishermen

செவ்வாய்க்கிழமை அன்று திரிசூரில் நாட்டிகா கடற்கரையில் காணாமல் போன படகு குறித்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் மீனவர்கள் கவலைப்பட்டபோது, ​​தேவாங் சுபில் எனும் 19 வயதான இன்ஜினியர் அவர்களை அணுகினார். ஆரம்பத்தில் யாரும் அவர் சொல்வதை கேட்கத் தயாராக இல்லை, அவர்களில் சிலர் அவரிடம், இது குழந்தை சம்மந்தப்பட்டது. விளையாட்டு அல்ல என்று கூறி விலக்கினர்.

Kerala BTech Student drone helps spot and rescued fishermen

நாட்டிகா சட்டமன்ற உறுப்பினர் கீதா கோபி அவரது வேண்டுகோளைக் கேட்டபின் அவர் பொலிஸ் மற்றும் மீட்பு அதிகாரிகளை அணுக உத்தரவளிக்க, சுபில் தனது ட்ரோனுடன் மீட்பு படகில் ஏற முடிந்தது. “இது எனது முதல் ஆழ்கடல் பயணம். எங்கள் படகு கடற்கரையிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் சென்றபோது எனது ட்ரோனை வெளியிட்டேன். ஆரம்பத்தில் காற்று சிக்கல்களை உருவாக்கியது, ஆனால் 20 நிமிடங்களுக்குப் பிறகு, என் ட்ரோன் ஒரு மனிதனின் முதல் காட்சிகளை என் மொபைல் தொலைபேசியில் மங்கலாக படம் பிடித்தது” என்று சுபில் தன் மீட்பு நடவடிக்கையை விவரித்தார்.

Kerala BTech Student drone helps spot and rescued fishermen

விரைவில் மீனவர்களும் கடலோர காவல்துறையினரும் தங்கள் கப்பல்களில், கடலில் மூழ்கிய முதல் மனிதர் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அவரை மீட்டனர். பின்னர் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில், அவர்கள் இருவரைக் கண்டுபிடித்து மீட்டனர்; நான்காவதானவரின் இடத்தைக் கண்டுபிடிக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனதாகக் கூறும் சுபில், “நான்காவது மனிதன் சோர்வுக்குப் பிறகு நீரில் மூழ்கும் விளிம்பில் இருந்தார். அவர் மீட்கப்பட்ட சில நிமிடங்களில், அந்த நபர் தனது சுயநினைவை இழந்தார்,” என்று தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் 4 பேரும் திருச்சூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கடலில் கழித்தனர், அவர்களில் ஒருவர் கரைக்கு ஒரு SOS-ஐ அனுப்ப முடிந்தது, இது மற்றவர்களை எச்சரித்தது. "சரியான நேரத்தில் தலையிட்டு நான்கு உயிர்களைக் காப்பாற்றிய இந்த இன்ஜினியர் இளைஞருக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். புதிய கண்டுபிடிப்புகள் எவ்வாறு உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்பதை அவர் நமக்குக் காட்டினார். அவரை கரவிப்பதற்கான ஆலோசனையுடன் நான் ஏற்கனவே அரசாங்கத்தை அணுகியுள்ளேன்” என்று எம்.எல்.ஏ கீதா கோபி கூறியுள்ளார்.

Kerala BTech Student drone helps spot and rescued fishermen

பெனலூருவின் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு படிக்கும் பி.டெக் மாணவர் சுபில், கொரோனா தொற்றுநோய் காரணமாக கல்லூரி மூடப்பட்ட பின்னர் தனது சொந்த இடத்திற்கு திரும்பியிருந்தார். தென்னிந்தியாவில் கடல்களில் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கேரள மீன்பிடி படகு ஆபரேட்டர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ட்ரோன்கள் மற்றும் ரயில் மீட்புப் படையினரைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை மாநில மீன்வளத் துறையிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

Kerala BTech Student drone helps spot and rescued fishermen

"இது ஒரு மலிவான மீட்பு முறை.  இதுபோன்ற தேடல் நடவடிக்கைகளுக்காக பொதுவாக ஹெலிகாப்டர்கள் மற்றும் வேக படகுகளையே சேவையில் அழுத்துகிறோம். ஆனால் இது மிகவும் செலவு குறைந்ததாகும்” என்று மாணவர் சுபில் கூறினார், அவர் மேலும் மாற்றங்களை செய்வார். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மீட்பவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தயாராக இருப்பார் என்றும் கூறி அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala BTech Student drone helps spot and rescued fishermen | India News.