'வேன் கவிழ்ந்து விபத்து'... 'பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 27, 2019 12:28 PM

பள்ளி மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school bus accident in chennai kanchipuram students injured

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பல்வேறு இடங்களில் இருந்து, தனியார் வேன்கள் மூலம் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில் 30 மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த மாணவ - மாணவிகள் அனைவரும் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பவுஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வேன் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : #INJURED #VAN #ACCIDENT