'காலேஜ் கேர்ள்ஸ் தான் மெயின் டார்கெட்...' 'நண்பரோட சிம்கார்ட்...' 'பெர்சனல் விஷயங்கள் லீக் பண்ணிடுவேன்...' - திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Sep 21, 2020 07:47 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாக பேசி, குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

Pudukkottai man arrested talk obscenely more than 100 women

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகர் போலீசாரிடம் 'தனக்கு மர்ம நபர் ஒருவர் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்கிறார். போனில் ஆபாசமாகப் பேசுவதோடு, தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், அப்படி இல்லையேன்றால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார்' எனப் புகார் அளித்துள்ளார்.

சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு, கணேஷ் நகர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் அழைப்பு வந்த செல்போன் நம்பர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) எனத் தெரியவந்ததுள்ளது.

காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திகேயன் இதற்கு முன்பே, இதே எண்ணின் மூலம் கல்லூரி மாணவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாகப் பேசி அவர்களை மிரட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கார்த்திகேயன் மீது பெண் கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர், கார்த்திகேயன் பயன்படுத்திய போன் நம்பர் அவருடைய பெயரில் வாங்காமல் தன் நண்பரின் பெயரில் சிம் வாங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான பெண்களிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசி அவர்களை தன் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார்.

அப்படியில்லையென்றால், உன்னுடைய அந்தரங்க விஷயங்களை வெளியில் விட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். அவர் பெரும்பாலும் கல்லூரி மாணவிகளிடம் தான் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இவர்மேல் புகார் அளிக்காததால், இதையே தன் தொழிலாகவும் பின்பற்றி வந்துள்ளார். இப்போது ஒரு பெண் அளித்த புகாரின் பெயரில் தான் இவரை கையும் களவுமாகப் பிடித்துவிட்டோம். வேறுயாரும் இதுபோல் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pudukkottai man arrested talk obscenely more than 100 women | Tamil Nadu News.