ET Others

ஒரு வருசத்துக்கு முன் காதலனுடன் ஓடிச்சென்ற மகள்.. அப்போ உருவான பகை.. தண்ணீர் பாய்ச்ச போன மாமனாருக்கு நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 08, 2022 08:00 PM

விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மாமனாரை மருமகன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nephew attacks father in law over love issue in Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சசிதரன் (வயது 45). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான சினேகாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சினேகா, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு காதலனுடன் சினேகா சென்றுள்ளார். இப்போது சினேகாவிற்கு காதலுடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தந்தை சசிதரனும், மகள் சினேகாவும் ஒரே பகுதியில் வசிப்பதால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சசிதரன் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விக்னேஷ், கடப்பாறை மற்றும் கத்தியை கொண்டு சசிதரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிதரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #RANIPET #NEPHEW #LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nephew attacks father in law over love issue in Ranipet | Tamil Nadu News.