'35 வருஷம் முன்னாடி ப்ரொபோஸ் பண்ணினது...' 'இப்போ தான் லவ் ஓகே ஆச்சு...' - இந்த பொறுமைய 90'S கிட்ஸ் கத்துக்கணும்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Dec 03, 2021 06:27 PM

மைசூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயம்மா. 65 வயது ஆகும் இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை செல்வம் இல்லாததால் அவருடைய கணவர் முப்பது வயதிலேயே தனியாக தவிக்க விட்டுவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

romantic king married his 65-year-old girlfriend in Mysore

இந்த நிலையில், இவரை அந்த பகுதியை சேர்ந்த சிக்கண்ணா என்பவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜெயம்மா அந்த காதலை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். தன்னுடைய கணவரை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம் என்று 35 ஆண்டுகளை கழித்துள்ளார் .

தற்போது அவருக்கு வயது 65 ஆகிறது. இந்த நிலையில் ஜெயம்மா, சிக்கண்ணாவை திருமணம் செய்ய ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளார் .இதையடுத்து இவர்கள் இருவருக்கும் அங்குள்ள குருஜி ஆசிரமம் ஒன்றில் அனைவரின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது.

இதில் சந்தோஷ நிகழ்வில் மணமக்கள் இவருடைய உறவினர்கள் பங்கேற்றுள்ளனர். 35 வருடத்திற்கு காத்திருந்து தன்னுடைய 65 வயது காதலியை திருமணம் செய்தவரின் தெய்வீக காதல் போற்றுதலுக்கு உரியது..

Tags : #MYSORE #LOVE #65-YEAR-OLD GIRLFRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Romantic king married his 65-year-old girlfriend in Mysore | India News.