'பொதுக் கழிப்பிடத்துக்குள் இருந்து வந்த இளைஞரின் குரல்!'.. கதவை உடைத்து மீட்டதும் 'சிரித்துக் கொண்டே வெளிவந்த நபர்'.. நடந்த சம்பவம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sivasankar K | Feb 08, 2021 10:34 PM

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக்கழிப்பிடம் உள்ளது.

Man mistakenly locked inside public toilet Chennai Viral

அங்கு இளைஞர் ஒருவர் நேற்று இரவு தொலைபேசியில் பேசியவாறே கழிப்பறைக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் இளைஞர் உள்ளே இருப்பதை அறியாமல் ஊழியர் ஒருவர், பொது கழிப்பறையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகுதான் அந்த இளைஞர், தான் கழிப்பறைக்குள் வைத்து தவறுதலாக பூட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.

இதனையடுத்து அவர், “யாராவது கதவை திறந்துவிடுங்கள் ப்ளீஸ்” என்று சத்தமாக கத்தியவாறு கழிப்பறையின் கதவை தட்டியுள்ளார். பேருந்து நிலையத்தில் பூட்டிய கழிவறைக்குள் இருந்து சத்தம் வந்ததை அடுத்து, அங்கிருந்த மக்கள் கூட்டம் கூடினர். கழிப்பறைக்குள் இருந்த இளைஞர், அங்கிருந்த மக்களிடம் நடந்ததை உள்ளிருந்தபடியே கூறியுள்ளார்.

ALSO READ: "பொறுத்திருந்து பாருங்கள்!!!" .. 4 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டர்கள், செய்தியாளர்கள் மத்தியில் சசிகலாவின் பட்டையை கிளப்பும் பேச்சு!

உடனே பூட்டு உடைக்கப்பட்டு இளைஞர் வெளியே மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இளைஞரோ சிரிப்புடன் வெளியே வர, அவரை கண்ட மற்றவர்களும் சிரித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man mistakenly locked inside public toilet Chennai Viral | Tamil Nadu News.