'பொதுக் கழிப்பிடத்துக்குள் இருந்து வந்த இளைஞரின் குரல்!'.. கதவை உடைத்து மீட்டதும் 'சிரித்துக் கொண்டே வெளிவந்த நபர்'.. நடந்த சம்பவம் இதுதான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக்கழிப்பிடம் உள்ளது.
![Man mistakenly locked inside public toilet Chennai Viral Man mistakenly locked inside public toilet Chennai Viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/man-mistakenly-locked-inside-public-toilet-chennai-viral.jpg)
அங்கு இளைஞர் ஒருவர் நேற்று இரவு தொலைபேசியில் பேசியவாறே கழிப்பறைக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் இளைஞர் உள்ளே இருப்பதை அறியாமல் ஊழியர் ஒருவர், பொது கழிப்பறையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகுதான் அந்த இளைஞர், தான் கழிப்பறைக்குள் வைத்து தவறுதலாக பூட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.
இதனையடுத்து அவர், “யாராவது கதவை திறந்துவிடுங்கள் ப்ளீஸ்” என்று சத்தமாக கத்தியவாறு கழிப்பறையின் கதவை தட்டியுள்ளார். பேருந்து நிலையத்தில் பூட்டிய கழிவறைக்குள் இருந்து சத்தம் வந்ததை அடுத்து, அங்கிருந்த மக்கள் கூட்டம் கூடினர். கழிப்பறைக்குள் இருந்த இளைஞர், அங்கிருந்த மக்களிடம் நடந்ததை உள்ளிருந்தபடியே கூறியுள்ளார்.
உடனே பூட்டு உடைக்கப்பட்டு இளைஞர் வெளியே மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இளைஞரோ சிரிப்புடன் வெளியே வர, அவரை கண்ட மற்றவர்களும் சிரித்தனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)