darbar USA others

இப்படியும் நடக்குமா?... 'எயிட்ஸ்' தாக்கிய தந்தையால்...10 வயது மகளுக்கு 'நேர்ந்த' கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 07, 2020 11:27 PM

சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 4 ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Life sentence to father for child abuse, mahila court

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த குமார்(37) மனைவி இறந்ததால் தன்னுடைய 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அருகில் உள்ள பள்ளியில் சிறுமி படித்து வந்த நிலையில் அவரின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியவே ஆசிரியர்கள் விசாரித்து உள்ளனர்.

அப்போது சிறுமி தன்னுடைய தந்தை குடித்துவிட்டு வந்து, தன்னை கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து ஆசிரியர்கள் சைல்டு லைனில் புகார் செய்து, சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் இருந்தபோது சிறுமிக்கு அவர் தந்தையிடம் இருந்து எயிட்ஸ் தாக்கியது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் மஹிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குமாருக்கு 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.4,500 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பில் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், உயர்தர சிகிச்சையும் அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து தீர்ப்பளித்தார்.