'கேரளா நம்பர்ல என்ட்ரி ஆன ஒரு ஆட்டோ...' 'நைசா வீட்ல போய் பேச்சு கொடுக்க மாஸ்டர் ஐடியா...' - அடுத்தடுத்து ஒரே போல நடந்த ரெண்டு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 07, 2021 03:34 PM

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பளுகல் பகுதியில் பகவதியம்மா (70) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது, ஆட்டோவில் வந்த மூன்று பேர் மூதாட்டியிடம்  பஞ்சு மெத்தை வாங்குகிறீர்களா என்று கேட்டுள்ளனர். பகவதியம்மா வேண்டாம் என்று பதில் கூறியுள்ளார்.

kanyakumari two incidents Auto robbers from Kerala

இதனையடுத்து, ஆட்டோவில் வந்த நபர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். தண்ணீர் கொண்டு வர பகவதியம்மா வீட்டுக்குள் சென்ற போது, ஆட்டோவில் இருந்த ஒருவன் பகவதியம்மாவின் பின்னாலேயே சென்று அவரின் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மூவரும் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர்.

பகவதியம்மா அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகாமையில் உள்ளோர் பிடிக்க முயன்றும் கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அருமனை அருகேயுள்ள தேவிகோட்டை சேர்ந்த வசந்த குமாரி என்பவர் முக்கூட்டுகல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது , ஆட்டோவில் வந்த மூன்று பேர் சேர்ந்து அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளனர். இது குறித்து அருமனை காவல் நிலையத்தில் வசந்தகுமாரி புகார் அளித்துள்ளார்.

பகவதியம்மாவிடம் செயின் பறித்த வாலிபர்களின் அடையாளங்களுடன் இந்த சம்பவமும் ஒத்து போனது. ஆகவே இரு சம்பவங்களிலும் ஒரே திருட்டு கும்பல் தான் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.

திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சந்தேகத்துக்குரிய வகையில் கேரளா ரெஜிஸ்டர் எண் கொண்ட ஒரு ஆட்டோ ஒன்று சுற்றி திரிவதை கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா மாநிலம் குந்நத்துகால் பகுதியை சேர்ந்த அனில் குமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, குந்நத்துகால் பகுதிக்கு போலீசார் அனில் குமாரை தேடி சென்றனர். ஆனால், குறிப்பிடப்பட்ட முகவரியில் அனில் குமார் இல்லை. போலீசார் தங்களை நெருங்கியதை அறியாத ஆட்டோ கொள்ளையர்கள் நேற்று (06-01-2021) வழக்கம் போல மீண்டும் தமிழக எல்லைக்குள் வந்தனர். அப்போது, அருமணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டனர்.

திருட்டு கும்பல் என தெரிந்ததும் போலீசார் மடக்கி பிடித்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த அனில் குமார் மற்றும் கேரளா மாநிலம் இடிச்சக்கபிலாமூட்டை சேர்ந்த முகம்மது ஷாபி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இரு பெண்களிடமும் நகை பறிப்பில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக் கொண்டனர். கேரளா, தமிழக எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் கை வரிசை காட்டியிருப்பதும் தெரிய வந்தது. இவர்களின் கூட்டாளியான மற்றோருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kanyakumari two incidents Auto robbers from Kerala | Tamil Nadu News.