darbar USA others

"பஸ் மீது கார் மோதி"... "ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!"... "கள்ளக்குறிச்சியில் பயங்கரம்"

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 13, 2020 04:36 PM

டயர் வெடித்ததால், நிலைதடுமாறி பேருந்து மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Car meets with accident near Ulundhurpettai in Kallakurichi

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். அவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியாருடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் டயர் வெடித்தது.

அச்சமயம், நிலைதடுமாறி சாலையின் மறுபக்கம் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கார் பயங்கரமாக மோதியது. இதில், முத்தமிழ்செல்வன், அவர் மனைவி, மாமியார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முத்தமிழ்செல்வனின்  உடல், சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காரில் இருந்த இரு குழந்தைகளும் நேற்று மருத்துவமனையில், தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இரு குழந்தைகளும் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CAR #BUS #HIGHWAY