darbar USA others

அமைச்சர் விஜயபாஸ்கரை... ஏர்போர்ட்டில் வழியனுப்பி விட்டு... திரும்பிய தனி உதவியாளருக்கு... நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 12, 2020 01:11 PM

திருச்சி அருகே புளிய மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Minister Vijayabaskar\'s PA and driver died in Accident

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் - ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ஆகியோரின் மகன், பவு என்கிற வெங்கடேசன் (31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும், இவர் அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக் கூறினார்.

பின்னர், எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு புறப்பட்டார். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டுவிட்டு, பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் திரும்பிக் கொண்டிருந்தார். கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கர மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் காரை ஓட்டிச் சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம் (38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் செல்வம் உள்ளிட்ட இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெங்கடேசனின் தாயார் இந்திரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ACCIDENT #VIJAYABASKAR #MINISTER #PERSONAL #SECRETARY #ASSITANT #விபத்து #அமைச்சர் விஜயபாஸ்கர்