‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Aug 20, 2019 12:45 PM
சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் பலர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![WATCH: Car runs over Eight in Uttar Pradesh caught on CCTV WATCH: Car runs over Eight in Uttar Pradesh caught on CCTV](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/watch-car-runs-over-eight-in-uttar-pradesh-caught-on-cctv.jpg)
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மொகத்திப்பூர் பஜார் பகுதியில் கார் ஒன்று சாலையில் தாறுமாறாக வந்துள்ளது. அப்போது சாலையின் ஓரமாக இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)