BGM Shortfilms 2019

‘அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி’... 'சாமி தரிசனத்துக்கு வந்தபோது’... ‘கார் மீது ஏறி, நடந்த கோர சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 13, 2019 02:23 PM

திருவண்ணாமலை அருகே சரக்கு லாரி, கார் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car and lorry accident near thiruvannamalai, 5 died

பெங்களூரு அடுத்த கொரமங்களாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் ரெட்டி - சந்திராம்பாள் தம்பதியர். இவர்கள் தங்களது மகன், மகள், மருமகன் உள்ளிட்டோரோடு, மேல்மருவ்த்தூர் கோவில் தரிசனத்துக்காக டொயோட்டா எட்டியாஸ் காரில் திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளனர். செங்கம் அடுத்த ஒட்டக்குடிசல் அருகே எதிரே அதிவேகமாக வந்த சரக்கு லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அப்பளம் போல் நொறுங்கிய காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், அவருடன் வந்த 3 பேர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டதோடு, லாரி ஓட்டுநரை மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளதாகக் கூறும் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அவர்களது குடுபத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Tags : #ACCIDENT #THIRUVANNAMALAI #DIED