legend updated recent

‘பைக்கை முந்தும் போது எதிரே வந்த கார்’.. ‘நேருக்கு நேர் மோதிய இரு பைக்குகள்’ 2 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 16, 2019 07:22 PM

கன்னியாகுமரியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Bike accident in Nagercoil, Two victims died

நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவர் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்துள்ளார். அந்த சமயம் சாலையின் வலது புறத்தில் கார் ஒன்று வந்துள்ளது. இதனால் இரண்டு இருசக்கர வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று உரசி கீழே விழுந்துள்ளன.

இதில் பிரபு ஓட்டிவந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு இருசக்கரத்தின் மீது வேகமாக மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் பயணித்த அனைவரும் தூக்கி வீசப்பட்டுள்ளர். இந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த சுதீர் மற்றும் பிஜூகுமார் என்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பிரபு என்பவர் குழித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : #CCTV #BIKE #ACCIDENT #NAGERCOIL #DIED