VIDEO: வாலிபரின் ஜீன்ஸில் புகுந்த 'விஷப்பாம்பு'... ஆடாம, அசையாம நிக்கவச்சு 8 மணி நேர 'கடும்' போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jul 31, 2020 07:32 PM

வாலிபரின் ஜீன்ஸ் பேண்டில் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Snake Enters Man’s Pants While He Was Sleeping in UP

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்தகர்பூர் என்னும் கிராமத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். இந்த வேலைகளுக்காக தொழிலாளர்களை அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் தங்கவைத்தனர்.

இந்த நிலையில் இரவில் தூங்கிக்கொண்டு இருந்த லவ்லேஷ் என்னும் தொழிலாளியின் ஜீன்ஸ் பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. தனது பேண்டிற்குள் ஏதோ ஒன்று ஊர்வதை அறிந்த லவ்லேஷ் சக தொழிலாளிகளிடம் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து அங்கிருந்த மின்கம்பி ஒன்றை பிடித்துக்கொண்டு ஆடாமல் நின்றுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் ஒருவரை அழைத்து வந்து நிலைமையை எடுத்து கூறியுள்ளனர். தொடர்ந்து பாம்பு பிடிப்பவர் லவ்லேஷின் ஜீன்ஸை சிறிது, சிறிதாக கிழித்து பாம்பை வெளியே கொண்டுவர போராடினர். 8 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. அதுவரை அந்த இளைஞர் கம்பத்தை பிடித்தவாறே எந்த அசைவுமின்றி நின்று கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Snake Enters Man’s Pants While He Was Sleeping in UP | India News.