legend updated recent

'அண்ணா கழுத்துல ஒரே ரத்தம்... 'பறந்து வந்த மாஞ்சா கயிறு'...தங்கையின் கண்முன்னே நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 17, 2019 03:54 PM

பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் 28 வயது பொறியியல் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Engineer dies after sharp kite string slits his Throat

டெல்லியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவ் ஷர்மா. இவர் தனது தங்கையுடன் ராக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாட, டெல்லியின் ரோகினி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது ஒரு பாலத்தின் மீது சென்ற போது, பைக்கை ஓட்டி கொண்டு சென்ற மாணவ் ஷர்மாவின் கழுத்தின் மீது மாஞ்சா கயிறு அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவ் ஷர்மாவின் கழுத்து அறுப்பட்டது. இதனையடுத்து அவரது கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறியது.

இந்நிலையில் தனது கண்முன்பே அண்ணனின் கழுத்து அறுபட்டதை கண்டு அதிர்த்த அவரது தங்கை, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர்ப் பிரிந்தது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக பேசிய  ஏடிஜிபி ராஜேந்தர் சிங் சாகர், கழுத்தை அறுத்த மாஞ்சா கயிறு கழுத்தின் உள் பகுதிக்குள் ஆழமாக வெட்டி இருப்பதால் உணவு மற்றும் சுவாச குழாய்யின் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவர் இறந்ததாக கூறியுள்ளார். ராக்‌ஷா பந்தன் கொண்டாட சென்ற இளைஞர் தங்கையின் கண்முன்பே உயிரிழந்த சம்பவம் டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #RAKSHA BANDHAN #DELHI #DIES #MANJHA #THROAT #ENGINEER