‘சிறுவர்கள் விளையாடிய விபரீத விளையாட்டு’.. பறிபோன 6 வயது சிறுவன் உயிர்..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 29, 2019 02:27 PM

பம்பு மூலம் வயிற்றில் காற்று நிரப்பி விளையாடியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 year old boy dies as friends pump air into his body

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது காற்று நிரப்பும் பம்பு மூலம் ஒருவருக்கொருவர் வயிற்றில் காற்றை நிரப்பி விளையாடியுள்ளனர்.

இதில் 6 வயது சிறுவன் ஒருவனுக்கு வயிறு திடீரென வீங்கியுள்ளது. இதனால் உடனே வீட்டிற்கு சென்று தனது தந்தையிடம் கூறவே, அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே மூச்சு திணறி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக வயிற்றில் பம்பு மூலம் காற்றை நிரப்பியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MADHYAPRADESH #BOY #DIES #PUMP #FRIENDS