பிக்பாஸ் சீசன் இப்போது ஆரம்பமாகிறது..! பிரபல நடிகர் ஏன் இப்படி சொல்கிறார்.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மிர்ச்சி செந்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸும் பிக்பாஸ் வீடும் | mirchi senthil says after corona the biggboss season begins

ரேடியோவில் ஆர்.ஜேவாக அறிமுகமானவர் மிர்ச்சி செந்தில். இதையடுத்து இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடித்த சரவணன் மீனாட்சி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதுமட்டுமின்றி இவர் சினிமா படங்களிலும் சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'உண்மையான பிக்பாஸ் சீசன் இப்போது தொடங்குகிறது. ஆனால் இந்த முறை குடும்பத்துடன் பூட்டிய வீட்டில் இருக்க போகிறோம். இது கொரோனா சைட் எஃபக்ட்ஸ்' என அவர் பதிவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற காஜல் பசுபதியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIDE EFFECTS OF CORONA...

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983) on

Entertainment sub editor