RIP : கொரோனாவிற்கு அடுத்த பலி... பிரபல இசை கலைஞர் மரணம் அடைந்தார் - துக்கத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரது இறப்பு செய்திகள் ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது. புகழ்பெற்ற இசை கலைஞராகிய பிரெட்ரிக் தாமஸ் (Frederick Thomas) தற்போது தன் குடும்பம், பிள்ளைகள், நண்பர்களை விட்டு கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இவர் புகழ்பெற்ற 'Hiphop' என்று அழைக்கப்படும் ராப் பாடல் இசைக்கலைஞர் ஆவார். இவருக்கு வயது 35. கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து வந்த அவர், தற்போது பரிதாபமாக பலியானார். இதுபற்றி அவரது நண்பரும் புகழ்பெற்ற மற்றோரு இசைக் கலைஞருமான DJ Self "எல்லாராலும் மிகவும் நேசிக்கப்பட்டவர். உங்களைப் பற்றி சொல்ல ஒரு கெட்ட விஷயம் கூட இல்லை. உங்கள் ஆத்துமா சாந்தி அடையட்டும்" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.