"அதிர்ஷ்ட தேவதை தாறுமாறா கண் தொறந்துருக்கு போல".. 2 மாசத்துல 16 கோடி.. தலைகீழான பெண்ணின் வாழ்க்கை!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jan 11, 2023 03:15 PM

பொதுவாக ஒரு நபருக்கு வாழ்க்கையில் எந்த நிமிடத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே சொல்ல முடியாது. திடீரென வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் என சென்று கொண்டிருக்கும் போது அப்படியே மொத்த வாழ்க்கையையே திருப்பி போடுவது போல ஏதேனும் சம்பவங்கள் அரங்கேறலாம், அதனை கொஞ்சம் கூட அந்த நபர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

Woman won 2 million dollars in lottery in two months

Also Read | ஜோஷிமத் மாதிரியே பூமிக்குள் புதையும் அடுத்த நகரம்.. பீதியில் பொதுமக்கள்.. உச்சகட்ட பரபரப்பில் அதிகாரிகள்..!

அப்படி ஒரு சூழலில் சிலருக்கு ஒரு முறையே அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நிலையில், அடுத்தடுத்து இரண்டு முறை அதிர்ஷ்ட அடித்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பெண் ஒருவருக்கு நடந்து பலரையும் வியப்பபில் ஆழ்த்த வைத்துள்ளது.

கேரளா, துபாய், கனடா உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி விற்பனை என்பது பரவலாக இருந்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்திலும் லாட்டரி டிக்கெட்டுகள் புழக்கம் அதிகம் உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட்டிற்கு அனுமதி இல்லை என்றாலும் நிறைய மாகாணங்களில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது.

இதன் காரணமாக, லாட்டரியில் வெற்றி பெறும் நபர்கள் குறித்த செய்தி அதிக அளவில் இணையத்தில் வைரல் ஆகவும் செய்யும். அப்படி தான் தற்போது பெண் ஒருவருக்கு லாட்டரியில் அடித்த பரிசு தொடர்பான செய்தி, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. வடக்கு கரோலினாவில் உள்ள ஷெல்பி என்னும் பகுதியை சேர்ந்தவர் கென்யா சோலன். இந்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இதில் அவருக்கு ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய்) பரிசு விழுந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்து போயிருந்தார் கென்யா சோலன். மேலும் இந்த பணத்தை கொண்டு சொந்தமாக அவர் வீடு கட்டவும் தொடங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Woman won 2 million dollars in lottery in two months

இதற்கடுத்து சுமார் ஒரு மாதம் கழித்து மீண்டும் லாட்டரி டிக்கெட் ஒன்றை கென்யா வாங்கி உள்ளார். இந்த நிலையில், மீண்டும் கென்யா சோலன் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது. அதிலும் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது. இப்படியாக சுமார் 2 மாத இடைவெளியில், இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் வரை பரிசு விழுந்துள்ளதால், தலை கால் புரியாமல் திக்கு முக்காடி போயுள்ளார் கென்யா சோலன். முந்தைய பரிசு பணத்தில் வீடு கட்டி வரும் கென்யா சோலன், தற்போது கிடைத்துள்ள பணத்தை கொண்டு உணவகம் ஒன்றை திறந்து தனது கனவை நிறைவேற்ற போவதாகவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது

பலருக்கும் லாட்டரியில் ஒரு முறை பரிசு கிடைப்பதே அரிதாக பார்க்கப்படும் நிலையில், பெண் ஒருவருக்கு இரண்டு மாத இடைவெளியில் இரண்டு முறை பெருந்தொகை லாட்டரி மூலம் பரிசாக விழுந்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | யம்மாடி என்ன ஸ்பீடு.. உம்ரான் மாலிக்கின் தீயான பவுலிங்.. மொத்த ரெக்கார்டும் காலி..!

Tags : #WOMAN #LOTTERY #WON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman won 2 million dollars in lottery in two months | World News.