விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 03, 2021 03:50 PM

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today is the last day for AIADMK optional application

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இன்று (03.03.2021) விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. காலை 11:30 மணியளவில் சுமார் 6200-க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை காலை 9 மணிக்கு தொடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Today is the last day for AIADMK optional application | Tamil Nadu News.