'ஃபேஸ்புக் நண்பரை நம்பி சென்ற 15 வயது சிறுமி...' '3 பேர் சேர்ந்து சவுக்கு தோப்புல வச்சு கூட்டு பாலியல் வன்கொடுமை...' - கதறி துடித்த பெற்றோர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 27, 2020 07:17 PM

திருவண்ணாமலையை சேர்ந்த 15 வயது சிறுமியை பேஸ்புக் மூலம் காதல் வலையில் மயக்கி தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tn tiruvannamalai 15 yr girl gang abused by facebook lover

திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் இலியாஸ் என்பவருக்கும் வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமம், கம்பன் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டதுள்ளது. சில மாதங்களாக நண்பர்களாக இருந்த இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி சிறுமியை சந்திக்க வேண்டும் என அழைத்த இலியாஸ் அவரை வந்தவாசி புறவழி சாலையில் உள்ள சவுக்குத் தோப்புக்கு  அழைத்துச் சென்றுள்ளார்.

இலியாஸை முழுமையாக நம்பிய சிறுமி சவுக்கு தோப்பிற்கு சென்றுள்ளார். அதையடுத்துதான் இலியாஸ் தனியாக வராமல் தன் நண்பர்கள் பர்கத், சூர்யா ஆகியோரை அழைத்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும்  மூவரும் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சவுக்கு தோப்பிலே விட்டு சென்றுள்ளனர்.

என்ன செய்வதென்று அறியாமல் சிறுமி அழுதுகொண்டே கிழிந்த ஆடைகளுடன் வீட்டை நோக்கி சென்று தன் பெற்றோர்களிடம் நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை வந்தவாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய, திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலியாஸ், இந்திரா நகரைச் சேர்ந்த பரக்கத் மற்றும் கீழ் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சூர்யா ஆகிய மூன்று பேர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : #CHILDABUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn tiruvannamalai 15 yr girl gang abused by facebook lover | Tamil Nadu News.