காதல் திருமணம் செஞ்ச மகள்.. கல்யாணத்துக்கு போகாத அம்மா.. கோவத்துல கணவர் செஞ்ச காரியத்தால் பதறிப்போன உறவினர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Aug 26, 2022 03:02 PM

திருவண்ணாமலையில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Thiruvannamalai Man arrested by police for slay his wife

Also Read | "இனி கடவுள் நினைச்சாதான்".. தகர்க்கப்படும் 100மீ உயர கட்டிடம்.. நிபுணர்கள் சொல்லிய வியக்கவைக்கும் தகவல்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த  ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய வயது 48. இவர் மனைவி ராணி வயது (43). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வெளிநாட்டில் வீட்டு வேலை செய்துவந்த ராணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மாமியார் மரணமடைந்த நிலையில் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அதன்பின் சொந்த ஊரிலேயே வசித்தும் வந்திருக்கிறார்.

Thiruvannamalai Man arrested by police for slay his wife

காதல் திருமணம்

இந்நிலையில் பழனி - ராணி தம்பதியின் மகள் புதூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இதில் ராணிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் அதே கிராமத்தில் ராணியின் மகளுக்கும் அவரது காதலருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இதில் இருவீட்டார் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்ட நிலையில், ராணி தனது மகளது திருமண விழாவில் பங்கேற்க செல்லவில்லை.

இதனிடையே தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் வசித்துவந்த ராணியின் சகோதரி வீட்டில் விசேஷம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் ராணி. இதனை கண்ட பழனி மகளின் திருமணத்துக்கு வராமல் சகோதரி வீட்டு விழாவிற்கு செல்வது குறித்து ராணியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதிர்ச்சி

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே, பழனி தனது மனைவியை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் மயங்கிவிழுந்த ராணி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அப்போது வீட்டுக்கு வந்த தம்பதியின் மகன் தனது தாய் மரணமடைந்ததை அறிந்து கதறி அழுதிருக்கிறார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் காவல்துறைக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர்.

Thiruvannamalai Man arrested by police for slay his wife

இதனையடுத்து பழனி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர்  ராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பக்கத்து கிராமத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஏலியன்கள் இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள்.?.. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படம்.. பரபரப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!

Tags : #POLICE #THIRUVANNAMALAI #MAN #ARREST #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thiruvannamalai Man arrested by police for slay his wife | Tamil Nadu News.