Tiruchitrambalam D Logo Top

ராத்திரி நேரத்தில் வந்த மர்ம கும்பல்.. கூச்சல் போட்ட 'மனைவி'.. விசாரணையில் அம்பலமான 'பகீர்' பிளான்.. திடுக்கிடும் பின்னணி

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Aug 22, 2022 07:58 PM

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியை அடுத்த வென்றிலிங்கபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் வைரவசாமி. இவரது மனைவி முத்துமாரி.

Tenkasi wife plan to her husband after return from work

Also Read | "37 லட்சம் வரி பாக்கி இருக்கு".. கூலி தொழிலாளிக்கு வந்த நோட்டீஸ்.. திடுக்கிட வைக்கும் பின்னணி!!

இவர்கள் இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்று திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம் போல வைரவசாமி மற்றும் முத்துமாரி ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமி பைக்கை வழிமறித்து, முத்துமாரியின் கழுத்தில் இருந்து நகைகளை பறிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மத்தியில், வைரவசாமிக்கும் அந்த கும்பலுக்கும் அடிதடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், வைரவசாமியை அந்த கும்பல் தாக்கிச் சென்ற நிலையில், சம்பவ இடத்திலேயே வைரவசாமி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முத்துமாரியின் நகைகளுடன் அந்த கும்பல் ஓட்டம் பிடித்த நிலையில், சாலையிலேயே கதறித் துடித்துள்ளார் மனைவி. இது தொடர்பாக, அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வைரவசாமியின் உடலை மீட்டு, காரில் வந்த கும்பல் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது நடந்த விசாரணையில், சம்பவ இடத்தில் கிடைத்த தடயமும், முத்துமாரி அளித்த வாக்குமூலமும் போலீசாருக்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, வைரவசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் முத்துமாரி. ஆனால், அதற்கு முன்பாக இசக்கி முத்து என்பவரை முத்துமாரி காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

திருமணத்திற்கு பின்னரும் இசக்கி முத்துவுடன் முத்துமாரி பேசி வந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றது. அதே போல, வைரவசாமி மற்றும் முத்துமாரிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இசக்கி முத்து உதவியுடன் கணவர் வைரவசாமியை கொலை செய்யவும் முத்துமாரி திட்டம் போட்டுள்ளார். இதற்காக, தங்கள் நிறுவனத்தில் இருந்து கிளம்பும் நேரத்தில், இசக்கி முத்து மற்றும் அவரது கூட்டாளிகளை தயார் நிலையில் இருக்கவும் முத்துமாரி அறிவுறுத்தி உள்ளார்.

இதன் பின்னர் தான், தனது திட்டம் போல வைரவசாமியை கொலை செய்து விட்டு, பின்னர் வழிப்பறிக்காக நடந்த கொலை போலவும் முத்துமாரி நாடகமாடி உள்ளார். ஆனால், காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில் முத்துமாரி, இசக்கி முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் சிக்கி உள்ளனர்.

ஆரம்பத்தில், நகையை கொள்ளையடிக்க மர்ம கும்பல் முயன்ற போது, கணவர் உயிரிழந்ததாக நாடகமாடி பின்னர் தீவிர விசாரணையில் மனைவி முத்துமாரி சிக்கியுள்ள சம்பவம், கடும் அதிர்வலைகளை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "105 குழந்தைங்கள வளக்கணும்".. அலாதி பிரியத்தால் தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைங்க பிறந்ததும் திடீர்ன்னு நடந்த 'ட்விஸ்ட்'!!

Tags : #TENKASI #WIFE #HUSBAND #WORK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tenkasi wife plan to her husband after return from work | Tamil Nadu News.