'தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய்...' பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 21, 2020 07:10 PM

தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவற்றுடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (20-12-2020) அறிவித்தார். 

Tamil Nadu get Pongal gift of Rs.2500 ration card holders

இதனையடுத்து, பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று (21-12-2020)  வெளியிடப்பட்டது. இதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசாக தலா ரூ.2.500 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  இன்று (21-12-2020) மாலை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திட்டத்தை தொடங்கி வைத்தார். விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu get Pongal gift of Rs.2500 ration card holders | Tamil Nadu News.