'பொங்கல் பரிசாக ரூ 2500!!!'... 'யாருக்கெல்லாம் கிடைக்கும்?... எப்போதிருந்து வழங்கப்படும்???'... 'முதலமைச்சர் அறிவிப்பு!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 19, 2020 04:21 PM

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 2,500 வழங்கப்படுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

TN CM Announces Pongal Gift Package Rs 2500 Cash To Rice Cardholders

இதுதொடர்பாக பேசியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்படும். 2021ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து, ஜனவரி மாதம் 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

TN CM Announces Pongal Gift Package Rs 2500 Cash To Rice Cardholders

அதோடு ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியுடன், ஒரு துண்டு கரும்புக்குப் பதிலாக முழு கரும்பு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வீடு வீடாக வந்து டோக்கன் கொடுக்கப்பட்டு, ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN CM Announces Pongal Gift Package Rs 2500 Cash To Rice Cardholders | Tamil Nadu News.